kingraja:
#பழுவேட்டரையர்கள்
#கீழையூர்
#இரட்டைக்கோயில்
இத...: #பழுவேட்டரையர்கள் #கீழையூர் #இரட்டைக்கோயில் இது அணுக்கன்வாயில் அளவிற்க்கு அத்தனை பிரசித்தம் பெற்ற நுழைவுவாயில் இல்லை , இருப்பி...
Wednesday, 10 October 2018
kingraja: திருவையாறுபஞ்சவன்மாதேவிச்வரம்தென்கயிலாயம்என்று ...
kingraja: திருவையாறு
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று ...: திருவையாறு பஞ்சவன்மாதேவிச்வரம் தென்கயிலாயம் என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் ...
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று ...: திருவையாறு பஞ்சவன்மாதேவிச்வரம் தென்கயிலாயம் என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் ...
kingraja: பழுவேட்டரையர்கள் கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூ...
kingraja: பழுவேட்டரையர்கள் கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூ...: பழுவேட்டரையர்கள் கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூர் மறவனீச்சுவரம் -ஆலந்துரைமஹாதேவர் ஆலயம் -இரட்டைக்கோவில் -பகைவிடைஈஸ்வரம் . சிற்...
kingraja: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம்#கண்டிராதித்தர்#செம...
kingraja: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம்
#கண்டிராதித்தர்
#செம...: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம் #கண்டிராதித்தர் #செம்பியன்மாதேவியார் வரலாற்றை வரலாறாகமட்டும் பாராமல் இன்றும் அந்த ஊர் மக்கள...
#கண்டிராதித்தர்
#செம...: #கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம் #கண்டிராதித்தர் #செம்பியன்மாதேவியார் வரலாற்றை வரலாறாகமட்டும் பாராமல் இன்றும் அந்த ஊர் மக்கள...
Monday, 1 October 2018
தொலைந்த நம் கலைகள்
பாரம்பரியமிக்க நம் பைந்தமிழ் நாட்டில் ஐவகை நிலமக்களும் தமக்கென்று தனித்துவ குணத்துடன் கலை, பண்பாடு,தொழில்முறை ,இறைவழிபாடு என்று செழுமையாய் வாழ்ந்திருந்தனர் ,மேலும் நமது சங்க இலக்கியங்களும் கோன் புரிந்த சாதனைகளையும் குடிமக்களின் நிலைப்பாட்டையும் ,அவர்களின் தொழில்கள் ,கலைகள், மொழிப்பற்று போன்றவற்றினை பறைசாற்றுகின்றது ,சங்க இலக்கியத்தில் கூறும்கலைகளில் பல சுவடழிந்தும் சில குற்றுயிரும் குலையுயிருமாக அழியும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.
குறிஞ்சிநில மக்கள் சேயோனை துதித்து ஆடிய கூத்து குன்றக்குரவைக்கூத்து என்றும் , முல்லைநில மாந்தர் மாயோனை துதித்து ஆடியக்கூத்து ஆச்சியர்குரவை என்கிறது தொல்காப்பியம் ,
மாதவி பதினொருவகையான ஆடல்வகைகளை வெளிப்படுத்தினால் என்று அரங்கேற்றுகாதையில் சிலம்பு கூறுகிறது ,
அவை கொடுகொட்டி,பண்டாரங்க்கூத்து ,அல்லியத்தொகுதி , மல்லாடல் , துடிக்கூத்து , குடைக்கூத்து , குடக்கூத்து , பேடி , மரக்காலாடல் , பாவை மற்றும் கடையம் எனப்படும் . அதனில் சாக்கைக்கூத்து மொன்று இதனை பறையூர் சாக்கைமாராயன் என்பான் சேரமன்னன் செங்குட்டுவன் அவையில் ஆடினான் என்பதனை
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூதகந் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன், என்று வஞ்சிக்காண்டம் பகர்கின்றது " தேனார் மொழியார் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில் "
"வலம்வந்த மடவார் நடமாட முழவதிர மழையென் றஞ்சிசிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே "
"தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் உறையும் புகார் "
"சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர் ஏரார்பூங் கச்சி "என்று ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குறவர்கள் ஆடல்கலைகளை புகழ்ந்துள்ளனர்
இப்படி குணக்கடல் முதல் குடக்கடல் வரை செழித்த இக்கலையானதுதற்போது கேரளத்தில் மட்டுமே உள்ளது இருப்பினும் பிற்கால சோழர்காலம் வரை இக்கலை தமிழகத்தில் தழைத்தோங்கியது என்பதற்க்கு கல்வெட்டுகளாய் சில சான்று நிற்கின்றது , முதலாம் ராஜராஜனின் தமையனும் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேஸரி எனும் ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆண்டு கல்வெட்டு திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவெள்ளறையை சேர்ந்த சாக்கையன் கீர்த்திமறைக்காடன் என்பவனுக்கு தானம் வழங்கியமை பற்றிய செய்திகூறுகிறது இவன் வைகாசி திருவாதிரைக்கும் தைப்பூசத்திருநாளுக்கும் ஆடியதாக கூறுகின்றது . கீழப்பழுவூர் ஆலந்துரையார் ஆலயத்தில் உள்ள உத்தமசோழரின் ஒன்பதாம் ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் ஐப்பசி மாத அஸ்வதி நாளில் நடைபெறும் திருவிழாவில் சாக்கைக்கூத்தாட அல்லையூரைச்சேர்ந்த சாக்கை ஆடுபவர்க்கு அரைக்கலஞ்சு பொன்னும் மூன்றுகலம்நெல்லும்வழங்கப்பட்டுள்ளது . காமரசவல்லி கார்கோடேஸ்வரர் ஆலயத்திலுள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் இருபத்தொன்பதாமாண்டு கல்வெட்டு வைகாசிமாதம் நடைபெறும் திருவாதிரை திருநாளில் சாக்கை கூத்தாட விக்கரமசோழனெனும் சாக்கை மாராயனுக்கு மூன்றுமா நிலம் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது .இக்கலையானது தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிட்டது எப்போது இக்கலை தமிழகத்தில் மறைந்தது என்பதற்கு நேரடியான தரவுகள் இல்லை இப்படி எத்தனை எத்தனையோ அதிசிறந்த கலைகளை வேந்தரும் மாந்தரும் போற்றிவளர்த்தனர் இன்றைய நாகரீககோமாளிகளான அவைகளை தொலைத்தோம் , இன்னும் பலவற்றை தொலைத்துக்கொண்டுஇருக்கிறோம் .
(சாக்கை கூத்திற்கான புகைப்படம் கிடையாகாரணத்தால் குடக்கூத்து சிற்பத்தை பதிந்துள்ளேன் )
(சாக்கை கூத்திற்கான புகைப்படம் கிடையாகாரணத்தால் குடக்கூத்து சிற்பத்தை பதிந்துள்ளேன் )
#பழுவேட்டரையர்கள்
#கீழையூர்
#இரட்டைக்கோயில்
இது அணுக்கன்வாயில் அளவிற்க்கு அத்தனை பிரசித்தம் பெற்ற நுழைவுவாயில் இல்லை , இருப்பினும் அந்த வாயிலினுள்ளே சென்று இறைவனை தரிசிக்கநாம் பெரும்பேறுபெற வேண்டும் !
முதலாம் ஆதித்தனின் வெற்றிகளுக்கு பக்கத்துணையாக இருந்து அவர்தம் புதல்வனுக்கு தனது புதல்வியை மணம்முடிக்கும் அளவிற்கு உறவை வலுப்படுத்தி அந்த பந்தம் முதலாம் ராஜேந்திரனின் காலம் வரை தொடர்ந்து சோழ சரித்திரத்தில் முக்கிய அங்கமாக விளங்கிய பழுவேட்டரையர்கள் திருவையாற்றில் உள்ள முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆண்டு கல்வெட்டு குமரன் கண்டனை அறிமுகப்படுத்துகிறது அதன் பிறகே இவர் சிற்றரசராக பதவி வகித்ததாக பலரது கூற்று . கீழையூரிலுள்ள முதலாம் ஆதித்தனின் பதிமூன்றாம் ஆண்டு கல்வெட்டே இரட்டை கோவிலின் தொன்மையான கல்வெட்டு குமரன் கண்டன் சிற்றரச பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் அத்தனை கலைநயமிக்க இன்றளவும் சிறுமாற்றத்திற்கும் உட்படாமலும் கம்பீரமாக எண்ணற்ற வரலாற்றுப்பொக்கிஷங்களை தாங்கிநிற்கும் சிறப்பான கற்றளியை இருவகையான ஆலயமாக அமைத்து வடபுறமுள்ளகோவிலை வடவாயில் ஸ்ரீகோயில் என்றும் தென்புறமுள்ளஆலயம் தென்வாயில் ஸ்ரீகோயில் எனப்படுகின்றது திருச்சுற்றில் கணபதி, முருகன் ,சப்தமாதர் , மூத்ததேவி மற்றும் சூரியன் என பரிவார ஆலயங்களுடன் அமைந்துள்ளன வடவாயில் வேசரமைப்புடன் கூடியக்கற்றளியில் பிரம்மன், முருகன் மற்றும் மஹாதேவர் ஆகியோர் கோஷ்டத்தில் அமர்ந்தநிலையிலும் நாகர அமைப்புடன் கூடிய தென்வாயிலில் நின்றகோலத்திலும் மிகஅழகாக வடித்துள்ளனர். பழுவேட்டரையர்கள் சேரநாட்டை சேர்ந்தவர்கள் என்றுகூறுகிறபப்படுகிறதுபழுவேட்டரையர் வம்சத்தினர் எக்காலத்தில் பழுவூர் பகுதிகளில் புலம்பெயர்ந்தார்கள் என்பதை அறியமுடியவில்லை என்றாலும் ஏழாம்நூற்றாண்டிலேயே மலையாளிகள் பழுவூரில் வாழ்ந்ததை திருஞான சம்மந்தர் பாடிய தேவாரப்பாடல் கூறுகிரது .
முதலாம் பராந்தகரின் பன்னிரெண்டாம் ஆட்சி ஆண்டில் நடைபெற்ற வெள்ளூர் போரில் பாண்டியமன்னன் ராஜசிம்மனோடு நடைபெற்ற போரில் பழுவேட்டரையன் கண்டான் அமுதன் தமது படையோடு சென்று சோழர்கு வழுவூட்டி பாண்டியப்படையை புறங்காணச்செய்தனர் இப்படைக்கு பழுவூர் அருகில் உள்ள பரதூரைசேர்ந்த படைப்பேரரையன் நக்கன் சாத்தன் என்பவன் தலைமையேற்றான் இம்மாவீரன் தன்மன்னவனின் வெற்றிக்காக திருவாலந்துறை மஹாதேவர்க்கு நொந்தாவிளக்கெரிக்க கூய ஆடுகளும் பழுவேட்டரையர் கண்டன் அமுதன் பிறந்த நட்சத்திரமான புனர்பூச நாளில் இறைவனுக்கு நெய்யபிஷேகம் செய்ய உயச ஆடுகளும் தந்துள்ளான். இவ்வெற்றிக்குப்பிறகே முதலாம் பராந்தகன் மதுரைகொண்டகோப்பரகேசரி எனஅழைக்கப்பட்டார் இந்த ராஜசிம்மனது மணிமுடியே இலங்கையில் ஒளித்துவைக்கப்பட்டு பின்னர் முதலாம் ராஜேந்திரசோழனால் கைப்பற்றப்பெற்றது , இக்கோயில் அமைந்தப்பகுதி அவனிகந்தர்வபுரம் எனவும் ஆலயமானது அவனிகந்தர்வபுரத்து ஈஸ்வரஹ்ரகம் எனப்படுகின்றது அவனிகந்தர்வபுரம் என்றால் பூலோகத்திலுள்ள தேவலோகம் போன்ற நகரம் அந்நகரத்தில் வாசம் செய்யும் இறைவன் அவனிகந்தர்வன் பூலோகத்து கந்தர்வபுருஷன் போன்ற அழகுடையவனை வணங்கிட நுழையும் மஹாமண்டபத்தின் முகப்புதான் இந்த நுழைவுவாயில் , மஹாமண்டபத்தினுள்ளேநாம் நுழைந்தவுடன் சிம்மத்தூண்கள் இருபுறமும் கம்பீரமாக கர்ஜித்தவாறு வரகேற்கின்றது அத்தூண்களில் உள்ள பழுவேட்டரையர்களின் பட்டப்பெயர்கள்
ஸ்வஸ்தி ஸ்ரீ மறவன்மாநதநந் ,
ஸ்வஸ்திஸ்ரீ கங்கமார்த்தாண்டன் //உ,
ஸ்வஸ்திஸ்ரீ கலியுகநிர்மூலன் ,
ஸ்வஸ்திஸ்ரீ அரையகள் அறை உளி .
இப்பெயர்களை தாங்கி நிற்கின்ற சிம்மத்தூண்களை காணுகையில் சிம்மத்தையொத்த பெரும்வீராதிவீரர்கள் பழுவேட்டரையர்கள்
குமரன்கண்டன்
குமரன்மறவன்
கண்டன்அமுதன்
மறவன்கண்டன் ஆகியோர்களேஅச்சிம்மத்தூண்களாக அவனிகந்தர்வபுரத்து மஹாதேவரை வணங்கவரும் நம் அனைவரையும் என்றும் அழியாப்புகளோடு நின்று வாழ்த்தி வரவேற்பதைபோன்றதொரு எண்ணம் எமை ஆட்கொள்கிறது .
Wednesday, 18 July 2018
திருவையாறு
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் சிவசரணசேகரன்
முதலாம் ராஜேந்திரனின் ஙயக ஆண்டினில் அவரது மனைவியான பஞ்சவன்மாதேவியார் என்பரால் எடுக்கப்பட்டது இதனை கல்வெட்டுகளில் தென்கயிலாயம் என்றே கூறப்படுகிறது ,
ஆலயமானது கருவறை உள்மண்டபம் முன்மண்டபம் திருச்சுற்றுமாளிகையோடு அழகுசேர்க்கிறது ,
திருச்சுற்றுமாளிகை தூண்கள் கருமைநிற மாக்கல்லால் ஆன நுளம்பர்களைப்பாணியைசேர்ந்த நுண்ணியவேலைப்பாடுகள் கொண்டவை
மொத்தம் நாற்பத்தியாறு தூண்கள் இவற்றில் நான்குமட்டுமே கலைநயத்தோடு அழகியவேலைபாடுள்ளது ,
தேவகோட்டத்தில் வீரபத்திரர் ,வென்குடையின்கீழ்நிற்கும் வினாயகர் ,சுகராசனத்தில் அமர்ந்த ஈசனின் மாறுபட்ட சிற்பங்களும் துர்கை மற்றும் சேயோன் என அழகு சேர்கின்ற ஆலயம் இன்று எளியோரின் பசிப்பிணி போக்கும் அன்னதானக்கூடமாய் விளங்குகிறது .
பஞ்சவன்மாதேவிச்வரம்
தென்கயிலாயம்
என்று இன்று அழைக்கப்படும் இவ்வாலயம் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளிய ஐய்யன் எனும் சிவசரணசேகரன்
முதலாம் ராஜேந்திரனின் ஙயக ஆண்டினில் அவரது மனைவியான பஞ்சவன்மாதேவியார் என்பரால் எடுக்கப்பட்டது இதனை கல்வெட்டுகளில் தென்கயிலாயம் என்றே கூறப்படுகிறது ,
ஆலயமானது கருவறை உள்மண்டபம் முன்மண்டபம் திருச்சுற்றுமாளிகையோடு அழகுசேர்க்கிறது ,
திருச்சுற்றுமாளிகை தூண்கள் கருமைநிற மாக்கல்லால் ஆன நுளம்பர்களைப்பாணியைசேர்ந்த நுண்ணியவேலைப்பாடுகள் கொண்டவை
மொத்தம் நாற்பத்தியாறு தூண்கள் இவற்றில் நான்குமட்டுமே கலைநயத்தோடு அழகியவேலைபாடுள்ளது ,
தேவகோட்டத்தில் வீரபத்திரர் ,வென்குடையின்கீழ்நிற்கும் வினாயகர் ,சுகராசனத்தில் அமர்ந்த ஈசனின் மாறுபட்ட சிற்பங்களும் துர்கை மற்றும் சேயோன் என அழகு சேர்கின்ற ஆலயம் இன்று எளியோரின் பசிப்பிணி போக்கும் அன்னதானக்கூடமாய் விளங்குகிறது .
பழுவேட்டரையர்கள்
கீழப்பழுவூர்-கீழையூர் -மேலப்பழுவூர்
மறவனீச்சுவரம் -ஆலந்துரைமஹாதேவர் ஆலயம் -இரட்டைக்கோவில் -பகைவிடைஈஸ்வரம் .
சிற்றரசர்களின் சரித்திரத்தில் இத்துனை பெயரோடும் புகழோடும் இருந்திருக்குமா!
பேரரசின்கீழிருந்தும், தனக்கென தனி படைக்களத்தோடுராஜ்ஜியம் புரிந்திருக்குமேயானால் !அப்பேரரசில் எத்துனை மதிப்பும் செல்வாக்கும் நம்பிக்கையுடைய உறவும் பூண்டிருத்தல்வேண்டும்.
பேரரசு செலுத்திய மன்னர்பெருமக்கமள் இறைவனுக்கு தமது பெயரைசூட்டி ஆலயம் எடுத்தமைபோல் பழுவேட்டரையர் தன்பெயரில் எடுப்பித்த க்கற்றளி #மறவனீச்சுவரம் அதன்பின் அவரது சந்ததியினர் அவர்களது ஆட்சிக்குட்பட்டப்பகுதியில் எழிலார்ந்த பேரழகுவாய்ந்த திருக்கற்றளிகளை எடுப்பித்துத்தருளுகின்றனர் ,
மேலும் ,
பழுவூர் சிற்றரசமரபினர் சோழப்பேரரசு ஆட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் அரும்பெரும் அறக்கொடை புரிந்துள்ளமையை காணும்போது அவர்கள் எத்தனை செல்வச்செழிப்போடு இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது அவைகள் ,
திருவையாறு பஞ்சநதிஸ்வரர் , திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ,லால்குடி சப்தரிஷிகேஸ்வரர், உடையார்குடி அனந்தீஸ்வரர் ,கோவிந்தபுத்தூர் கங்காஜடாதீஸ்வரர் போன்றவைகளை கூறலாம் . சிற்றரசர்களாக இருந்தபோதிலும் அரசுசெலுத்துவதிலும், அறம்செய்தததிலும் , சிவப்பணியிலும், தன்னைநிலைநிறுத்திக்கொண்டனர் .
இவர்கள் எடுப்பித்த ஆலயங்களில் மறவனீசுவரம் எனும் பசுபதீஈஸ்வரர் ஆலயம் அழிவுறும் நிலையில் உள்ளது, அருகிலிருக்கும் ஆலந்துரையார் ஆலயம் சமீபத்தில் சீரமைத்து குடமுழுக்கு நடைபெற்று வண்ணமயமாய் காட்சிதருகிறது .ஆனால அருகிலேயே இருக்கும் இந்த பாசுபதீசுவரரை உள்ளூர் மக்கள் கைவிட்டபோதும் இறைவன் அரியலூர்- தஞ்சைசாலையில் வருவோர்போவோர் அனைவரிலும் எவரேனும் ஒருவர் தமது இருப்பிடத்தை காத்தருள்வர்என்று காத்திருக்கிறார் பன்நெடுங்காலமாக.
ஆறுதலான விஷயம் சிவனடியார்கள் சிலர் ஆலயத்தை கவனித்துக்கொள்கிறார்கள் விரைவில் இவ்வாலயமும் புத்துயிர் பெறவேண்டுமென்று ஆவாகொண்டு அவர்கள் பதாகை வைத்துள்ளனர் , தொல்லியல்துறையும் இந்துசமய அறநிலையத்துறையும் அவர்களது சிறப்புக்களை சொல்லத்தேவையில்லை ?
மாபெரும் மன்னன் எடுப்பித்த # மானம்பாடி ஆலயத்தையே !மண்மேடாய் மாற்றிவிட்டனர்.
#கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம்
#கண்டிராதித்தர்
#செம்பியன்மாதேவியார்
வரலாற்றை வரலாறாகமட்டும் பாராமல் இன்றும் அந்த ஊர் மக்கள் உணர்விலும் உள்ளத்திலும் அசைபோட்டுக்கொண்டிருப்பதை காண்கையில் மற்ற ஊர்மக்களும் இதுபோல் வரலாற்று தொன்மையையும் பாரம்பரியசின்னங்களின் மீதும் சிறிதளவேனும் அக்கறை கொண்டால்போதும் இன்னும்பலத்தலைமுறைகளுக்கு பாதுக்காப்பாய்க்கணக்கிடைத்திடும் ,
மதிரைக்கொண்ட கோப்பரகேசரியின் முதற்புதல்வன் ராஜாதித்தன் தக்கோலப்போரில் இறந்துவிட இரண்டாம் புதல்வன் கண்டிராதித்தசோழர் ஆட்சிப்பொறுப்பேற்கிறார் ( 950 - 957 ) சிவநெறிசெல்வரான இவர் பாடிய திருப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது குறிப்பிடதக்கது , இம்மன்னர் பெருமான் காவிரியின் வடகரைத்தலமான திருமழபாடி அருகில் தனது பெயரில் கண்டிராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பகுதியை நிறுவி அங்கே கண்டிராதித்த விண்ணகரம் என்ற ஆலயத்தை பெருமாளுக்கு நிர்மானித்துள்ளார், அந்த ஆலயம் தற்போது அங்கு இல்லை , இவரது மனைவியான செம்பியன்மாதேவியார் தமது வாழ்நாளில் சிவத்தொண்டு புரிந்து பழுத்த பழமானார் ஐந்து மன்னர்களின் ஆட்சியில் சிறப்பாகவாழ்ந்ததை இவரது கல்வெட்டே நமக்கு கூறுகிறது , இவர் பல்வேறு ஆலயங்களை புணரமைத்து திருப்பணி செய்திருந்தாலும் தமது கணவரின் பெயரில் ஓர் ஆலயத்தை கோனேரிராஜபுரத்தில் எடுப்பித்து அங்கே தன்கணவர் இறைவனை வழிபடுவதைப்போல் சிற்பம் வடித்துள்ளார் ,
ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கண்டிராதித்த சோழர் ஸ்தாபித்த கண்டிராதித்தசதுர்வேதிமங்கலம் என்று சிறந்த அந்த ஊர் இன்றும் அரியலூர் மாவட்டத்தில் இன்றும் #கண்டிராதித்தம் என்றபெயரிலேயே விளங்குவது மேலும் சிறப்பு இவ்வூரில் இத்தம்பதியரின் அருந்தவப்புதல்வன் உத்தமசோழர் எடுப்பித்து குலோத்துங்கசோழனால் திருப்பணி செய்யப்பட்ட சொக்கநாதர் ஆலயம் தற்போது சில நல்லஉள்ளம் கொண்ட அன்பர்களினால் புதுப்பிக்கும் பணியில் உள்ளது மகிழ்வை தருகிறது , அத்தோடு நில்லாமல் சில ஆண்டுகளுக்குமுன்பு தமது ஊரின்பெயர் காரணத்தைஅறிந்து அம்மன்னர் பெருமானுக்கும் அவரது துணைவியாருக்கும் ஊரின் மத்தியில் சிலை நிறுவிஅறிஞர்பெருமக்களை அழைத்து விழாஎடுத்து மரியாதை செலுத்தியுள்ளனர் .
Friday, 2 February 2018
திருப்பூந்துருத்தி
நண்பர்கள் திருச்சி பார்த்தி முருகன் நட்ராஜ் மற்றும் செந்தலையில் இணைந்துகொள்ள அக்கோவில் சிறப்புக்களை கண்டுமகிழ்ந்த பிறகு பூந்துருத்தி செல்லலாம் எனக்கூறினேன் அவர்களும் இசைந்தார்கள் ஆலயத்தை அடைந்த பிறகு ஸ்தலவரலாற்றையும் கல்வெட்டு சிறப்புக்களையும் கையேட்டில் அலசினார் பார்த்தியும் முருகனும்
1300ஆண்டுகளுக்கு முன்பே உழவாரப்பணியை சீரும்சிறப்புமாக எவ்வித விளம்பரமும் இல்லாது இறைப்பணியை சிரமேற்கொண்டு பணித்துவந்தார் அப்பர்பெருமான். இச்செய்தி கேள்வியுற்ற சம்மந்தப்பெருமான் இறைவனையும் இறைப்பணியாளனையும் கண்டுசேவிக்க வருகைபுரிந்த சிவிகையை தானும் சுமந்து மகிழ்ந்த நெறியாளார் இப்பெரியோரோ உழவாரம்புரிந்த புண்ணியஸ்தலத்தை நான் மிதியேன்என வாயிலில் நின்றே இறைவனை தரிசிக்க வேண்டிட நந்தியெம்பெருமானும் நகர்ந்து இறைவனை வழிபட வழிவிட்டஸ்தலம் .
முதலாம் ஆதித்தன்,முதலாம்பராந்தகன் ,சுந்தரசோழர் ,உத்தமசோழர் ,ராஜாராஜர் ,ராஜேந்திரர் ,குலோத்துங்கர் ,மற்றும் சுந்தரபாண்டியர் ஆகியோரது காலத்தில் உன்னதநிலையில் இருந்தமையை கல்வெட்டாய் சான்று பகர்கின்றது . தஞ்சை ராஜராஜேச்சுவரத்தில் ராஜராஜன் உலா அரங்கேறியது என்றால் இங்கே ராஜராஜன்விஜயம் எனும்நிகழ்வு அரங்கேறியுள்ளது ,இக்கல்வெட்டை காணவே நாங்கள் வெகுநேரம் தொலைத்து கடைசியில் வெளிக்கோபுரத்தின் அதிட்டானத்தில் இருந்தமையால் மண்ணில் புதைந்திருந்த பகுதியை சற்றுதொண்டி கண்டுமகிழ்ந்தோம் ,கோபுரத்தினில் புடைப்புச்சிற்பங்களாய் இராவண அனுககிரகமூர்த்தி ,ஊர்த்துவத்தாண்டவர் ,கஜசம்காரமூர்த்தி ,காலசம்காரர் போன்றவை சுண்ணாம்புபூச்சையும் தாண்டி அழகுருகின்றது .
Subscribe to:
Posts (Atom)