பேரரசு செலுத்திய மன்னர்பெருமக்கமள் இறைவனுக்கு தமது பெயரைசூட்டி ஆலயம் எடுத்தமைபோல் பழுவேட்டரையர் தன்பெயரில் எடுப்பித்த க்கற்றளி #மறவனீச்சுவரம் அதன்பின் அவரது சந்ததியினர் அவர்களது ஆட்சிக்குட்பட்டப்பகுதியில் எழிலார்ந்த பேரழகுவாய்ந்த திருக்கற்றளிகளை எடுப்பித்துத்தருளுகின்றனர் ,
மேலும் ,
பழுவூர் சிற்றரசமரபினர் சோழப்பேரரசு ஆட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் அரும்பெரும் அறக்கொடை புரிந்துள்ளமையை காணும்போது அவர்கள் எத்தனை செல்வச்செழிப்போடு இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது அவைகள் ,
இவர்கள் எடுப்பித்த ஆலயங்களில் மறவனீசுவரம் எனும் பசுபதீஈஸ்வரர் ஆலயம் அழிவுறும் நிலையில் உள்ளது, அருகிலிருக்கும் ஆலந்துரையார் ஆலயம் சமீபத்தில் சீரமைத்து குடமுழுக்கு நடைபெற்று வண்ணமயமாய் காட்சிதருகிறது .ஆனால அருகிலேயே இருக்கும் இந்த பாசுபதீசுவரரை உள்ளூர் மக்கள் கைவிட்டபோதும் இறைவன் அரியலூர்- தஞ்சைசாலையில் வருவோர்போவோர் அனைவரிலும் எவரேனும் ஒருவர் தமது இருப்பிடத்தை காத்தருள்வர்என்று காத்திருக்கிறார் பன்நெடுங்காலமாக.
ஆறுதலான விஷயம் சிவனடியார்கள் சிலர் ஆலயத்தை கவனித்துக்கொள்கிறார்கள் விரைவில் இவ்வாலயமும் புத்துயிர் பெறவேண்டுமென்று ஆவாகொண்டு அவர்கள் பதாகை வைத்துள்ளனர் , தொல்லியல்துறையும் இந்துசமய அறநிலையத்துறையும் அவர்களது சிறப்புக்களை சொல்லத்தேவையில்லை ?
மாபெரும் மன்னன் எடுப்பித்த # மானம்பாடி ஆலயத்தையே !மண்மேடாய் மாற்றிவிட்டனர்.
No comments:
Post a Comment